நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நாளை

ஜெயம் தங்கராஜா

இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும் விடிந்திடாதோ நாளை
வேளையும் வந்து மகிழ்விக்காதோ நாளை

தேடி அலைபவருக்கு கிடைத்திடாதோ நாளை
நாடியவர்க்கு இறைவன் அருளாரோ நாளை
சுமைகளும் நீங்கி சுகமாகாதோ நாளை
அமைதியின் கோலம் வாராதோ நாளை

புது யுகமொன்று மலராதோ நாளை
புதுமையின் பக்கங்கள் விரியாதோ நாளை
நன்மைகள் தாங்கியே உருவாகிடாதோ நாளை
இன்றல்ல நேற்றல்ல மாற்றங்களோ நாளை.

Nada Mohan
Author: Nada Mohan