சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

நாளை

ஜெயம் தங்கராஜா

இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும் விடிந்திடாதோ நாளை
வேளையும் வந்து மகிழ்விக்காதோ நாளை

தேடி அலைபவருக்கு கிடைத்திடாதோ நாளை
நாடியவர்க்கு இறைவன் அருளாரோ நாளை
சுமைகளும் நீங்கி சுகமாகாதோ நாளை
அமைதியின் கோலம் வாராதோ நாளை

புது யுகமொன்று மலராதோ நாளை
புதுமையின் பக்கங்கள் விரியாதோ நாளை
நன்மைகள் தாங்கியே உருவாகிடாதோ நாளை
இன்றல்ல நேற்றல்ல மாற்றங்களோ நாளை.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading