நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

இதயம்-61

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025

ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே

கணமெல்லாம் உழைத்து
கண்மூடி தூங்கினாலும்
கண் உறங்கா இதயமே
காலனுக்கு கை கொடுப்பது நீயா?

நாலறை வால்வு திறந்து மூட லப்டப்
நிமடத்தின் துடிப்போ 72
வலி கொடுத்தாயானால்
வாழ்வு தொலைந்திடுமாம்

சந்தோஷ்த்தில் மகிழ்ந்து
துக்கத்தில் சுருங்கி
உடலெல்லாம் உயிரூட்டி
ஒவ்வொரு துடிப்பும் புதுவாழ்வு இதயமே.…

Jeba Sri
Author: Jeba Sri