நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
********இலக்கு*********
“”””””””'””””””””””
உள்ளத்தின் துடிப்பு , உணர்வலையின் கொதிப்பு.
ஊக்கத்தின் உயிர்ப்பு , உதிரத்தில் கலந்தோர் விறு விறுப்பு.

சுடுக்குப் போட்டுச், செயல் ஆற்றும், குறிவைக்கும்
இலக்கு .
சூரணம் போல், நாசுள் ஏறும் விறுக்கென்ற மிடுக்கு.

கோபம் மிகுதியால் , கொதித்தெழுந்து , குறி வைக்கும் , இலக்கு.
பாசத்தின் பிணைப்பதனால் , பெருமை சேர்ப்பதுவும் ஒரு உருத்து.
இலக்கு……. இலக்கு

அங்கமெல்லாம் நொந்த தாய்க்குத், தங்கம் பூட்டி மகிழவே ஒரு துடிப்பு.
அடுப்பெரிய உழைத்தவரோ, சபையினிலே , மார் தட்டவேண்டி, ஆக்குரோச வெடிப்பு.

தாய்மொழி க்குத் தரணியிலே பெருமை சேர்க்கவே , அயராத, ஓயாத உண்மை உழைப்பு .
தெவிட்டாத தேன்மொழியைத் , தேசமெல்லாம் தொனிக்க வைக்கும் அண்ணலுக்கு ஒரு முடி சூட்டு .
இலக்கு…….. இலக்கு
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan