சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
********இலக்கு*********
“”””””””'””””””””””
உள்ளத்தின் துடிப்பு , உணர்வலையின் கொதிப்பு.
ஊக்கத்தின் உயிர்ப்பு , உதிரத்தில் கலந்தோர் விறு விறுப்பு.

சுடுக்குப் போட்டுச், செயல் ஆற்றும், குறிவைக்கும்
இலக்கு .
சூரணம் போல், நாசுள் ஏறும் விறுக்கென்ற மிடுக்கு.

கோபம் மிகுதியால் , கொதித்தெழுந்து , குறி வைக்கும் , இலக்கு.
பாசத்தின் பிணைப்பதனால் , பெருமை சேர்ப்பதுவும் ஒரு உருத்து.
இலக்கு……. இலக்கு

அங்கமெல்லாம் நொந்த தாய்க்குத், தங்கம் பூட்டி மகிழவே ஒரு துடிப்பு.
அடுப்பெரிய உழைத்தவரோ, சபையினிலே , மார் தட்டவேண்டி, ஆக்குரோச வெடிப்பு.

தாய்மொழி க்குத் தரணியிலே பெருமை சேர்க்கவே , அயராத, ஓயாத உண்மை உழைப்பு .
தெவிட்டாத தேன்மொழியைத் , தேசமெல்லாம் தொனிக்க வைக்கும் அண்ணலுக்கு ஒரு முடி சூட்டு .
இலக்கு…….. இலக்கு
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan