22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 267
28/05/2024 செவ்வாய்
வேள்வி
————
உயிரை எடுப்பதும் வேள்வி!
உணர்வை அழிப்பதும் வேள்வி!
பயிரைக் கெடுப்பதும் வேள்வி!
பாரினில் எங்கில்லை வேள்வி!
இயற்கை செய்திடும் அனர்த்தம்,
இதனால் வரும்மன அழுத்தம்!
செயற்கையில் வந்திடும் அழிவு,
சேர்ந்திடில் பெரும் மனப் பிழிவு!
உயர்ந்து வந்திட்ட பேரலைகள்!
ஊரினுள் சென்ற சில நொடிகள்!
கவர்ந் திழுபட்ட இன்னுயிர்கள்!
காலம் மறந்திடாப் பெரு வலிகள்!
அறுபதில் இருந்து கண்ட பேறு!
அங்கே ஓடுது நம்குருதி ஆறு!
வெறுமின அரசியல் பூசுது சேறு!
வேள்வி தானங்கு நடக்குது பாரு!
உலகெங்கும் நடக்குது வேள்வி!
உள்ளத்தில் ஏனென்று கேள்வி!
கலகங்கள், தாங்காது இப்பூமி!
காலங்கள் சொல்லுமா நற்சேதி!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...