10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 267
28/05/2024 செவ்வாய்
வேள்வி
————
உயிரை எடுப்பதும் வேள்வி!
உணர்வை அழிப்பதும் வேள்வி!
பயிரைக் கெடுப்பதும் வேள்வி!
பாரினில் எங்கில்லை வேள்வி!
இயற்கை செய்திடும் அனர்த்தம்,
இதனால் வரும்மன அழுத்தம்!
செயற்கையில் வந்திடும் அழிவு,
சேர்ந்திடில் பெரும் மனப் பிழிவு!
உயர்ந்து வந்திட்ட பேரலைகள்!
ஊரினுள் சென்ற சில நொடிகள்!
கவர்ந் திழுபட்ட இன்னுயிர்கள்!
காலம் மறந்திடாப் பெரு வலிகள்!
அறுபதில் இருந்து கண்ட பேறு!
அங்கே ஓடுது நம்குருதி ஆறு!
வெறுமின அரசியல் பூசுது சேறு!
வேள்வி தானங்கு நடக்குது பாரு!
உலகெங்கும் நடக்குது வேள்வி!
உள்ளத்தில் ஏனென்று கேள்வி!
கலகங்கள், தாங்காது இப்பூமி!
காலங்கள் சொல்லுமா நற்சேதி!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...