பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:285
05/11/2024 செவ்வாய்
அழியாத கோலங்கள்
——————————-
மின்னலுடன் இடி மழையும்
மேகமே அதிரும் நிலையும்
சன்னம் பறந்திடும் ஒலியும்
சாவா வாழ்வா எனும் வலியும்!

கன்னை கன்னையாய் பிரிந்து
கயவருடன் போரிட்டு முடிந்து
பின்னை தம்மிடை போரிட்டு
புறணி சொல்லி மண்டியிட..!

தென்னை பனைதனை விட்டு,
தெற்கு வடக்காய் புறப்பட்டு..
தன்னை, தன்னுள்ளே ஒறுத்து,
தானியங்கி யந்திரமாய் கறுத்து.!

இந்திரலோக வாழ்வு கண்டும்,
இன்றும், தான் பிறந்த மண்ணும்..
சுந்தரனாய் பாதுகாத்த கண்ணும்
சுகமாய் வாழவேண்டி எண்ணும்..!

பந்தமிகு பாசமுயிர் வாழும்வரை
பரந்தமன நல்லவர் உள்ளவரை,
அந்தமென ஒன்று இல்லாதவரை..
அழியா,நாம் இட்ட கோலங்கள்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading