ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 205
03/01/2023 செவ்வாய்

“தை மகளே!”
———————
தைமகளே! தலை மகளே வருக!
தரணி போற்றிடும் தாயே வருக!
மையிட்ட கண் பெண்ணே வருக!
மங்களம் நிறைவாய் தந்திட வருக!

முப்பத் தொரு நாட்களுடன்,
முகூர்த்த நாளும் கொண்டவளே!
செப்பிய படியே மணவறையில்,
சேர்ந்து கொள்ள வைப்பளே!

புற்றை வெட்டி, மண் எடுத்து,
புதிய அடுப்பு தனைப் பிடித்து,
கற்ற அழகுக் கோல மிட்டு,
கதிரவன் தன்னை வரவேற்க!

நெல்லு மணியின் உமி நீக்கி,
நெய்யும் சேர்த்து பொங்க லிட,
வெல்லம், பாலும், முந்திரியும்,
வேண்டி விரும்பிச் சேர்ந்திடவே!

துன்பமும் துயரமும் கருகிடவே,
தூய்மை துளிர்த்துத் தழைத்திடவே,
வன்மமும் வஞ்சமும் ஒழிந்திடவே,
வஞ்சியே வருக! வளம் தரவே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan