பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 186
23/08/2022 செவ்வாய்
விடுமுறை
—————
ஓடி ஓடி நித்தம் வேலையெனெ
ஓயாது உழைத்துச் சோர்ந்து
வாடி நிற்கும் மனமதை வருடி
வைத்திடத் தேவை விடுமுறையே!

நிதமாய் காணும் மனைகளின் வரிசைகள்
நிழலே இல்லா பெரும்தெருக் கரைகள்
விதமாய் தோன்றும் வன்மிகு செயல்கள்
விடுத்துக் கொண்டிட விடுமுறை வேண்டும்!

ஊருக்குச் செல்வது ஒரு தனி சுகம்!
உறவுகள் தரிசனம்-அது தரும் இதம்!
பாரினைச் சுற்றி நாம் வரும் வலம்
பட்ட காயங்கள் ஆற்றிட வழிவிடும்!

நீலநிற வானமும் நிறைமுக மதியும்
நிம்மதியை மனதில் கொண்டுவரும்!
பாலைவன நெஞ்சும் பசுமை பெறும்!
பக்குவமாய் இதயத்தை வருடிவிடும்!

அலைகடல் ஓரத்தில் அமர்ந்திருக்க
அலைபாயும் நெஞ்சில் அமைதிவரும்!
விளைநிலம் தனை நீ வலம்வரவே
விலையில்லா மனவளம் வந்துசேரும்!

உடலும் உள்ளமும் நலம் வேண்டில்
உனக்கு வேண்டும் விடுமுறையே!
கடலும் மலையும் கண்ட திருப்தி
களைத்த மனதில் களிப்பினைத் தருமே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading