மனித உரிமைகள்

கெங்கா ஸ்ரான்லி

எமது உரிமைகள் தொலைந்தது
எத்தனை வருடங்கள்
எதற்காக நாம் போராடினோம்
நினைவிலே நிறுத்துக
தாம் வாழும் நாட்டில்
தமக்கில்லை மனித உரிமைகள்
வேறு நாட்டில் கிடைத்தென்ன
கிடைக்குமா
தமிழ் மண்ணில் கிடைப்பது போலாகுமா
உலகெங்கும் மனித உரிமைகள்
பறிக்கப் படுகிறதே
இதைக் கேட்பவரில்லையா
வல்லினம் தானே மெல்லினத்தை
வதைக்கிறதே
வல்லினத்தை கேட்காதபடியால்
ஆணவத்தில் தலைதூக்கி ஆடுகிறது
இதையும் அனைத்துக் கண்களும்
பார்க்கின்றன
சில கண்ணில் நீர் வடிகிறது
சில கண்ணில் கனல் பறக்கிறது
சில கண்ணில் ஏளனம் தெரிகிறது
மனிதம் இல்லா மனம் சிரிக்கட்டும்
மனிதமும் ஒரு நாள் ஜெயிக்கும்
மனித உரிமைகளும் அங்கு கிடைக்கும்
உரிமை மீறலுக்கு ப் போராடி போராடி
தோத்தது போதும்
விடியல் கிடைக்கட்டும்!

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading