பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மனித உரிமைகள்

கெங்கா ஸ்ரான்லி

எமது உரிமைகள் தொலைந்தது
எத்தனை வருடங்கள்
எதற்காக நாம் போராடினோம்
நினைவிலே நிறுத்துக
தாம் வாழும் நாட்டில்
தமக்கில்லை மனித உரிமைகள்
வேறு நாட்டில் கிடைத்தென்ன
கிடைக்குமா
தமிழ் மண்ணில் கிடைப்பது போலாகுமா
உலகெங்கும் மனித உரிமைகள்
பறிக்கப் படுகிறதே
இதைக் கேட்பவரில்லையா
வல்லினம் தானே மெல்லினத்தை
வதைக்கிறதே
வல்லினத்தை கேட்காதபடியால்
ஆணவத்தில் தலைதூக்கி ஆடுகிறது
இதையும் அனைத்துக் கண்களும்
பார்க்கின்றன
சில கண்ணில் நீர் வடிகிறது
சில கண்ணில் கனல் பறக்கிறது
சில கண்ணில் ஏளனம் தெரிகிறது
மனிதம் இல்லா மனம் சிரிக்கட்டும்
மனிதமும் ஒரு நாள் ஜெயிக்கும்
மனித உரிமைகளும் அங்கு கிடைக்கும்
உரிமை மீறலுக்கு ப் போராடி போராடி
தோத்தது போதும்
விடியல் கிடைக்கட்டும்!

Nada Mohan
Author: Nada Mohan