இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மனோகரி கெகதீஸ்வரன்

பனிப்பூ

வெண்மை கொட்டிச் சிரிப்பாள்
எம்பூமிக்கும் போர்வை விரிப்பாள்

பூக்கள் புற்கள் கற்கள்
தளிர்கள் மீதும் பூப்பாள்
ஆக்கும் கவிகளையும் அலங்கரிப்பாள்
கதிர்க்கரமணைக்க காணாமலே போவாள்

புதிரே இவள் பூப்பு
பனிக்காலத்திலேயே இவள் வரவு
பார்க்கப் பார்க்கப் பரவசத்தைக் கோர்க்கும் இவளுறவு

இவளோர்

மங்கை கூந்தல் காவப்பூ
மணத்தை வீசா மாயப்பூ
மங்களம் சுட்டாப் போலிப்பூ – ஆனாலும்
மலர்வினைத் தீட்டும் பனிப்பூ

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading