21
May
“பள்ளிப் பருவத்திலே”
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
பனிப்பூ
வெண்மை கொட்டிச் சிரிப்பாள்
எம்பூமிக்கும் போர்வை விரிப்பாள்
பூக்கள் புற்கள் கற்கள்
தளிர்கள் மீதும் பூப்பாள்
ஆக்கும் கவிகளையும் அலங்கரிப்பாள்
கதிர்க்கரமணைக்க காணாமலே போவாள்
புதிரே இவள் பூப்பு
பனிக்காலத்திலேயே இவள் வரவு
பார்க்கப் பார்க்கப் பரவசத்தைக் கோர்க்கும் இவளுறவு
இவளோர்
மங்கை கூந்தல் காவப்பூ
மணத்தை வீசா மாயப்பூ
மங்களம் சுட்டாப் போலிப்பூ – ஆனாலும்
மலர்வினைத் தீட்டும் பனிப்பூ
மனோகரி ஜெகதீஸ்வரன்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.