“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மனோகரி கெகதீஸ்வரன்

பனிப்பூ

வெண்மை கொட்டிச் சிரிப்பாள்
எம்பூமிக்கும் போர்வை விரிப்பாள்

பூக்கள் புற்கள் கற்கள்
தளிர்கள் மீதும் பூப்பாள்
ஆக்கும் கவிகளையும் அலங்கரிப்பாள்
கதிர்க்கரமணைக்க காணாமலே போவாள்

புதிரே இவள் பூப்பு
பனிக்காலத்திலேயே இவள் வரவு
பார்க்கப் பார்க்கப் பரவசத்தைக் கோர்க்கும் இவளுறவு

இவளோர்

மங்கை கூந்தல் காவப்பூ
மணத்தை வீசா மாயப்பூ
மங்களம் சுட்டாப் போலிப்பூ – ஆனாலும்
மலர்வினைத் தீட்டும் பனிப்பூ

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan