ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

ஆறு மனமே

குலையும் உடலின் கட்டு
முதுமை உன்னைத் தொட்டு
அலையும் மனமும் கெட்டு
அதையிதை நாளும் கேட்டு

விலையின் ஏற்றம் கண்டு
விருந்தை மறக்கும் வயிறு
மனதும் சரியும் சுருண்டு
சூழ்ச்சி கண்டு மிரண்டு

வற்றியும் போகும் தனம்
வசமிழந்து மாறும் குணம்
சுற்றியும் பற்றும் சினம்
சுடுகாடாயே மாறும் மனம்

வாட்டிடக் கழறும் உறவும் தினம்தினம்
வந்து காட்டும் நோயும் தரிசனம்
உலகிலே உலவிடுதே இவ்நூதனம்
உள்ளமெல்லாம் இருப்பதோ நரித்தனம்
யாரிங்கு காட்டுவர் கரிசனம்

ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவனிடமே கேளு

மனோகரி ஜெகதீஸ்வரன்.
பதியப்படவில்லை

உறவும் ஒதுங்கும் விட்டு

Nada Mohan
Author: Nada Mohan