20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
விருப்பத் தலைப்பு
பஞ்சம் பழிபற்றிச் சூழ
நெஞ்சம் அஞ்சித் துவள
கெஞ்சிக் கூனி கூத்தாடிக்
காத்தாடியாகி
நடுநடுங்கி நாச்சுருண்டு வாழவோ
உன்மடி தவழ்ந்தோம் அன்னையே
தளிரும் மலரும் காயும்
கனியும் மணியும் முத்தும்
நெல்லும் குவிந்த புலத்தில்
குருதி புகுந்தது ஏனம்மா
உறுதி குலைந்ததும் ஏனம்மா
கருகிய உடல்கள் குவிந்ததுமேனம்மா
கண்ணியம் காணாது போனதுமேனம்மா
நீயூட்டிய பாலில் பேதமுண்டோ தாயே
இனமதமொழிச் சாயமுண்டோ தாயே
நாம்காயம் கண்டதற்கு
காரணமென்ன தாயே
காட்சிச் சாட்சிச் திரிபுகளுக்கும் காரணமென்ன தாயே
சூழ்ச்சி வலையில் சீக்கினையோ
ஆட்சி இழந்ததோ உந்தன் அன்பு
வாயே திறவா உந்தன் மௌனம்
தாயே உனக்கு தகுமோ?
சேயே நாமுனக்கு
சோதியில் கலக்கும் வரைக்கும்
தங்கித் தன்மானத்துடன் வாழத் தாதரை
ஏங்கி வதங்கா முறை
மனோகரி ஜெகதீஸ்வரன்.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...