பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

உயிர் கொடை

பொத்தென மிரட்டிப் பூட்டினர் வாயை
புத்தகக் கூடாரத்துக்கும்
வைத்தனர் தீயை
சொத்தாம் புத்தகங்களும்
கண்டன சாவை
நித்தமும் சூழ்ந்து
நிலைகுலைய வைத்தது
சுத்தம் விட்டவரின்
பேரினவாத உபாதை

கடையாரின் சேட்டை
கனதியான வேட்டை
காட்டினேன் அதிலே காணவே சிலதை
காட்டினால் முழுதைக்
காலனும் அஞ்சுவான்

இன்னல் அறுத்து
இறைமை காக்க
தன்னலம் அறுத்த
தலைவன் தம்பி
சொன்ன படியே
சொன்ன வழியே
மின்னலெனப் புகுந்து
மிரளவைத்தார் களத்தை
சன்னங்களால் சரிந்து
சரித்திரமானார் நிலத்தில்
சின்னமாய் மிளிர்கின்றார்
துயிலுமில்லத் தளத்தில்

வீணாய் வாழ்வை விம்மிக் கழிக்காமல்
நானாநீயா என்பதில்
குறியாய் நின்றார்
தானே தாமாய்
தம்முயிரை ஈய்ந்தார்

உயிர்கொடையே உயர்ந்த கொடை
உவந்தளித்தார்க்கு என்றுமில்லைப் புகழ்த்தடை
உயிர்கொடையாளர் இவர்க்குக் கொடுக்கோம் நாம்விடை
என்நாளும் இருப்பரெம் இதயச்சுடரில்
இனிவருமா முடை தடை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading