பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மொழியும் கவியும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.01.25
ஆக்கம் 175
மொழியும் கவியும்

உணர்வில் பெற்ற
தோற்றம்
ஊற்றெடுத்துக் கற்ற
மொழியில் சொல் நயமோ அடுக்குத்
தொடுப்பில் ஆற்றல்
கொட்டிக் கொண்டதே

வாய் ஒலியும் ,கை அசைவும்
மெய் எனும் உடம்பில்
பொய் எனும் இரை
மீட்பும் பேராற்றலில்
ஒட்டிக் கொண்டதே

விளக்கம் விபரிக்கும்
பழக்கமதில் உள்ளம்
உவகை பொங்க
ரசனை விரிந்து
உவமானம் உவமேயம்
ஒப்பீடு தொங்க
மொழியும் கவியும்
ஒன்றோடொன்று
போட்டி போட்டுக் கொண்டதே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan