ரஜனி அன்ரன்

“ மாதர் மாண்பு “…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.03.2023

மாதவம் செய்திட்ட மாதரை
மனுக்குலத்தின் மாணிக்கங்களை
வீட்டின் மின்மினிகளை
நாட்டின் கலங்கரை விளக்குகளை
தியாகத்தின் சிகரங்களை
உறுதியின் உன்னதரை
உன்னதமாய் மதித்திடுவோம் !

தடைகள் பலதையும் தாண்டி
சமூகக் கட்டுக்களை உடைத்து
நிதர்சனங்களை நியாயமாக்கி
விமர்சனங்களை எதிர்கொண்டு
தன்னம்பிக்கையோடு போராடி
மென்மைக்குள் மேன்மையாகி
மேதினியில் சாதனையே மாதர் மாண்பு !

மாதர் சக்தி மாபெரும் சக்தி
மாதர் மாட்சி மண்ணிற்கு எழிற்சி
மாதரின்றி மன்னுலகில்லை
மாதரின்றி மனுக்குலமில்லை
மாதரின்றி எழிலுமில்லையே
மாண்புடை மாதரை மகத்துவமாக்கி
மாட்சியைப் போற்றுவோம் !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading