ரஜனி அன்ரன்

“ மாதர் மாண்பு “…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.03.2023

மாதவம் செய்திட்ட மாதரை
மனுக்குலத்தின் மாணிக்கங்களை
வீட்டின் மின்மினிகளை
நாட்டின் கலங்கரை விளக்குகளை
தியாகத்தின் சிகரங்களை
உறுதியின் உன்னதரை
உன்னதமாய் மதித்திடுவோம் !

தடைகள் பலதையும் தாண்டி
சமூகக் கட்டுக்களை உடைத்து
நிதர்சனங்களை நியாயமாக்கி
விமர்சனங்களை எதிர்கொண்டு
தன்னம்பிக்கையோடு போராடி
மென்மைக்குள் மேன்மையாகி
மேதினியில் சாதனையே மாதர் மாண்பு !

மாதர் சக்தி மாபெரும் சக்தி
மாதர் மாட்சி மண்ணிற்கு எழிற்சி
மாதரின்றி மன்னுலகில்லை
மாதரின்றி மனுக்குலமில்லை
மாதரின்றி எழிலுமில்லையே
மாண்புடை மாதரை மகத்துவமாக்கி
மாட்சியைப் போற்றுவோம் !

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading