10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ரஜனி அன்ரன்
“ உழைப்பு “….கவி….ரஜனி அன்ரன்(B.A) 04.05.2023
உழைப்பின் வாசமே
உழைப்பாளிகளின் சுவாசம்
உடலை இயந்திரமாக்கி
உழைப்பை உரமாக்கி
உழைக்கும் வர்க்கமே
உன்னதமான உழைப்பாளிகள்
உலகம் இயங்க உயிர்கள் வாழ
உழைப்பாளிகளின் கடின உழைப்பே உறுதுணை !
உடலும் மனமும் வலுவடைய
மனிதனைப் பண்படுத்துவது உழைப்பு
தன்னம்பிக்கை உணர்வை ஊட்டி
சாதனைத் தடத்தினை எட்டிப்பிடிக்க
அச்சாரமானது உழைப்பு
வாழ்விற்கான அழைப்பே உழைப்பு !
இயற்கை கூட கற்றுத் தருகுது
உழைப்பு எனும் பாடத்தை
உதயசூரியன் உதித்தால் தான் வெளிச்சம்
வியர்வை சிந்தி உழைத்தால் தான்
விரைவில் கிட்டும் வெற்றிக்கனி
உழைப்பே உயர்விற்கு வழி
உழைப்பே நல்வாழ்விற்கு விழி !

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...