ரஜனி அன்ரன்

“ செங்காந்தள் மலர்கள் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 30.11.2023

கார்கால கார்த்திகையில்
கனமழை பொழிகையில்
மண்ணினுள் வேரோடி
வேலிகளில் படர்ந்து கொடியாகி
காவல் தெய்வங்களை ஆராதிக்க
ஆண்டிற்கு ஒருமுறையாக
அழகாகப் பூத்துக் குலுங்குமே
செங்காந்தள் மலர்கள் !

செங்குருதி நிறத்தோடு
பொன்மஞ்சள் வண்ணம் தாங்கி
அகல்விளக்காய் ஒளிர்ந்து
கார்த்திகை மைந்தர்களை
கைகூப்பி தொழுகிறதே
செங்காந்தள் மலர்கள் !

பழந்தமிழர் இலக்கியங்களில்
பண்பாட்டு விழுமியங்களில்
புறநானூற்று வீரத்தில் கலந்து
தேசத்தின் தேசீயப் பூவாக
தேச மைந்தர்களின் ஆராதனைப் பூவாக
பூத்துக் குலுங்குமே செங்காந்தள் மலர்கள் !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading