புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ரஜனி அன்ரன்

“ செங்காந்தள் மலர்கள் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 30.11.2023

கார்கால கார்த்திகையில்
கனமழை பொழிகையில்
மண்ணினுள் வேரோடி
வேலிகளில் படர்ந்து கொடியாகி
காவல் தெய்வங்களை ஆராதிக்க
ஆண்டிற்கு ஒருமுறையாக
அழகாகப் பூத்துக் குலுங்குமே
செங்காந்தள் மலர்கள் !

செங்குருதி நிறத்தோடு
பொன்மஞ்சள் வண்ணம் தாங்கி
அகல்விளக்காய் ஒளிர்ந்து
கார்த்திகை மைந்தர்களை
கைகூப்பி தொழுகிறதே
செங்காந்தள் மலர்கள் !

பழந்தமிழர் இலக்கியங்களில்
பண்பாட்டு விழுமியங்களில்
புறநானூற்று வீரத்தில் கலந்து
தேசத்தின் தேசீயப் பூவாக
தேச மைந்தர்களின் ஆராதனைப் பூவாக
பூத்துக் குலுங்குமே செங்காந்தள் மலர்கள் !

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading