முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

ரஜனி அன்ரன்

“ செங்காந்தள் மலர்கள் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 30.11.2023

கார்கால கார்த்திகையில்
கனமழை பொழிகையில்
மண்ணினுள் வேரோடி
வேலிகளில் படர்ந்து கொடியாகி
காவல் தெய்வங்களை ஆராதிக்க
ஆண்டிற்கு ஒருமுறையாக
அழகாகப் பூத்துக் குலுங்குமே
செங்காந்தள் மலர்கள் !

செங்குருதி நிறத்தோடு
பொன்மஞ்சள் வண்ணம் தாங்கி
அகல்விளக்காய் ஒளிர்ந்து
கார்த்திகை மைந்தர்களை
கைகூப்பி தொழுகிறதே
செங்காந்தள் மலர்கள் !

பழந்தமிழர் இலக்கியங்களில்
பண்பாட்டு விழுமியங்களில்
புறநானூற்று வீரத்தில் கலந்து
தேசத்தின் தேசீயப் பூவாக
தேச மைந்தர்களின் ஆராதனைப் பூவாக
பூத்துக் குலுங்குமே செங்காந்தள் மலர்கள் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading