10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
28.02.23
ஆக்கம்-95
மொழி
கற்காது விலங்காயிருந்தது கற்று
விளப்பம் தெரிந்து மொழி பேசத்
தெரிந்ததுமே ஆறறிவு படைத்த
மனிதன் ஆகினான் அன்றோ
மனிதன் ஒவ்வொருவனுக்கும்
மொழி முக்கியமானதொன்று
நடிப்பு, நாடகம், இசை,அழுகை,
சிரிப்பு,சைகை இவை அனைத்தும்
உணர்வு,எண்ணம் வெளிப்படுத்தும்
ஒரு கருவியானது அன்றோ
தமிழனுக்குத் தாய் மொழி தமிழன்றோ
தமிழ் மொழிக்குத் தரணியில் தலை
வணங்காதவருமுண்டோ
எத்தனை மொழி வந்திடினும் அத்தனை
மொழியிலும் எம் மொழி தான் பல
சொற்கள் தேடி பல பல அர்த்தம் கூடி
சரித்திர சாதனை படைக்கிறதன்றோ
ஒரு இனமழிய வேண்டுமாயின்
மொழி அழிய வேண்டுமே
இதனால்தான் தமிழ் மொழி பேசும்
ஒட்டுமொத்தத் தமிழனை இல்லாதொழிக்க
பொல்லாத சிங்கள அரசு பயங்காரவாதப்
பட்டியலில் முத்திரை குத்தி தலை
வெட்டி துரத்தித் துரத்தி விழுத்துகிறதன்றோ.

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...