ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.05.22
ஆக்கம்-59
தீயில் எரியும் எம் தீவு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமே
முதுமொழியோ மூட்டி விட்டதே
பதுங்கு குழியில் பாதாளச் சிறையிலே
பிதுங்கிய விழியுடன் ஒதுங்கியே போயினரே

கதறக் கதற குத்தி எடுத்த சிறுநீரகக் குதறலது
போற்றும் பச்சைப் பாலனை பிஸ்கற் புகுத்தி
மூச்சை முடித்த இதயத் துடிப்பது
கொத்துக் குண்டால் பொத்தென விழுந்து
உடல் கிழிந்து உதிரம் சொரிந்து உயிரோடு
புதைந்த கூக்குரலது

மாவீரர் துயிலும் இல்லமதை இடித்தழித்த
மிருகத்தைத் துரத்த ஈன்றவர் மனதில் புகைந்த
தீப்பந்தமே எம் தீவில் பற்றி எரிகின்றது

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading