பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ராணி சம்பந்தர்

27.08.24
ஆக்கம் 157
பருவம்
பாதைகள் நீண்டு
போதை கூடுது
பயணம் தோன்றி
வேறு பாதை நாடுது
போகும் விழியில்
வாழ்வுப் பருவமதில்
சாகும் வழி தொடருது

பள்ளிப் பருவம்
ஆரம்பம் ஆகுது
துள்ளிய உருவம்
பாடம் படித்து
அள்ளி வளருது

நுள்ளிய உணர்வு
பதினாறில் தூக்கம்
இன்றிக் கொள்ளி
போடத் தொடங்குது

பருவம் பொல்லாதது
பார்த்து நடக்கத்
தெரியாதது
போராடும் மனதில்
நல்லது சிந்தியாது
கேடு கெட்டது புகுந்து
அடிமைப் பசியில்
திசை மாறி உருக்-
குலையுது பாழாய்ப்
போன பருவம்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan