” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

27.08.24
ஆக்கம் 157
பருவம்
பாதைகள் நீண்டு
போதை கூடுது
பயணம் தோன்றி
வேறு பாதை நாடுது
போகும் விழியில்
வாழ்வுப் பருவமதில்
சாகும் வழி தொடருது

பள்ளிப் பருவம்
ஆரம்பம் ஆகுது
துள்ளிய உருவம்
பாடம் படித்து
அள்ளி வளருது

நுள்ளிய உணர்வு
பதினாறில் தூக்கம்
இன்றிக் கொள்ளி
போடத் தொடங்குது

பருவம் பொல்லாதது
பார்த்து நடக்கத்
தெரியாதது
போராடும் மனதில்
நல்லது சிந்தியாது
கேடு கெட்டது புகுந்து
அடிமைப் பசியில்
திசை மாறி உருக்-
குலையுது பாழாய்ப்
போன பருவம்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan