வசந்தா ஜெகதீசன்

மாறுமா மோகம்…
வேறுபட்ட வாழ்வரணில்
வீழ்ந்திருக்கும் இடர்நிலையில்
காலம் தந்த சுவடுகள்
மாறுகின்ற முகவரி
ஏற்றிருக்கும் இனமானம்
ஏதிலியாய் வாழ்கின்றோம்
சூழல் தரும் சுவாசத்தில்
சுதந்திரத்தின் வாழ்விலே
நாளும் நாம் மாறினோம்
நலிந்து நலிந்து வாழ்கிறோம்
மாறும் மோகப்புயலிலே
வேகம் கொண்ட படகென
வேற்றினத்துச் சாயலில்
பூசும் வர்ணம் ஆயிரம்
விலத்தும் சாயம் சிலரசம்
விலத்தா நிலை பலர் வசம்
மாறுமோ மோகமெனில்
மாறுபட்ட பதிலுண்டு
கூறப்பட்ட குவலயத்தில்
குழப்பம் தான் மறுமொழி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading