பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பனிப்பூ …
தூவு துகள்களாய் வீழ்ந்து குவிந்தது
தூரமெங்குமே வெள்ளை படர்ந்தது
அழகுப் புவியாய் அகத்தைக் கவர்ந்தது
அவனியெங்குமே பனிப்பூ நிறைந்தது

பாலர் கூடியே பனிப் பாவை ஆக்குவர்
பனியில் சறுக்கியே பாலர் மகிழுவர்
பூம்பனியின் லீலையில் பூக்கும் பரவசம்
கால மகிழ்விலே கரைந்து விலகுமே

உள்ளக்கமலமும் வெள்ளை நிறையுமா
உருகு பனியாய் அன்பில் குழையுமா
மனித நேயம் மன்றில் நிறையுமா
மனதின் நெருடல் மறைந்து விலகுமா

பனியின் படர்வில் பாரே அழகு
உராயும் அகத்தில் உண்மை நிறைவு.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan