பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கவி வீச்சு 25

கவி வீச்சின் வீரியத்தில்…
ஈர் பத்துடன் ஐந்தாகப் பிரசுரம்
இ. மாகீசன் இதழாக பிரசவம்
என்னுடன் பலரிணையும் கவிக்களம்
இருபந்தைந்தாம் இதழாகி வெளிவரும்

முன்னுரையும் , முகவுரையும் தேடாது
மண்டபமும் மக்களையும் கூட்டாது
தன்னிதழாய் தனித்துவமாய் மிளிர்வது
ஈரிண்டு வாரத்தின் கோர்ப்பாகும்
இயல்பொன்றும் கவிஞர் குழாமாகும்

அருண்குமாரின் அரும்பணியில்
நூலாகும்
பாமுகத்து நெடுங்கனவு நீள்தொடர்ச்சி
தொழில்நுட்ப வளர்ச்சிநிலை பதிப்பாக்கல்
தொடர்கவிஞர் எண்ணங்களின் எழுத்தாற்றல்
கவிதைகளாய் காணொளியாய் வலம்வரினும்
எழுத்தாற்றல் பேணுகின்ற இலக்கோடு
என் கவியும் கவிஞர்குழாம் நூலாகி
என்றுமே காசினியில் நிலைபெறுமே
ஏற்றத்தின் வழிசெப்பும் தொண்டுப்பணி
நின்றுயர்க! நீடுவாழ்க! இன்றிதுவே சரிதமென இடித்துரைத்து
வருங்கால வழிமுறைக்கு வடிகால் செப்பும்
வானுயர் வாகையுடன் பாமுகத்து
கவிக்களமே நீ வளர்க! கவி வீச்சாய் நீ மலர்க! உடனிருந்து ஊக்கம் சேர் உறவுகளின் பேராற்றல் பெரும்பணிக்கும் என் இதயத்து நன்றி கோடி!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan