மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஆதியின் மரபு…
காலச் செதுக்கலில் கணதி பெருகுது
ஞாலமன்றிலே நவீனம் வளருது
கருவி உலகென காத்திடம் பெறுகுது
நடையது குன்றிட நோயும் நிறையுது

வாழும் வரவிலே வற்றாத நதி
ஆழம் நிறைந்தது ஆதியின் நெறி
உரலும் உழக்கையும் உடல்வள உறுதி
அம்மியும் குழவியும் உடற்பயிற்சியின் தகுதி
அரைத்த உணவு ஆரோக்கிய மிகுதி
விறகு அடுப்பின் ஊதும் கலையில்
சுவாசத்தின் பை சுருங்கி விரியுமே

காய்கறி கீரை இயற்கை உணவு
நோய்நொடியற்றதாய் நீண்டபொழுது
கிணற்றிலே நீர் அள்ளி இறைத்து
கிடைக்குமா இங்கு ஆதியின் மரபு
இயந்திர அடிமையாய் இயங்குதே வாழ்வு
நிரந்தர நிரம்பலில் நிறையுதே உலகு.
நன்றி

குரலிணைக்கும் சகோதரி க்கும், தட்டிக்கொடுப்பில் உற்சாகம் தரும்
நெறியாளருக்கும் மனமார்ந்த நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading