“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சாந்தி………..
உறைந்துள்ள ஓவியமாய்
உலகையே வென்றிடும்
அமைதியே அடிப்பலம்
ஆழ்மனதின் மனத்திடம்
சலனத்தைப் புறந்தள்ளும்
சாந்தியே மெயப்படும்
கடினத்தை வென்றுயர்ந்து
காரியத்தை நிருபிக்கும்
சாந்திக்கு ஒப்பயர்வு
சரணத்தின் மெய்யுறவு
வாழ்க்கையின் வரவேற்பு
வற்றாத நீருற்று
சாந்தியே சரணகதி
சக்தி வாய்ந்த உலகையறி.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan