கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தலைசாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்…
காவியத்து நாற்றுக்கள்
கலங்கரையின் விளக்குகள்
இலக்கின் விழுமியங்கள்
இன்னுயிர் ஈர்ந்தவர்கள்
தவத்தின் புதல்வர்கள்
தன்னம்பிக்கை வி்த்துக்கள்
மனிதம் வாழ்ந்தொளிர
மாவீரர் கொடையானார்
ஈழம் மீட்டெடுக்க இன்னுயிர் தியாகம் செய்தார்
அகலொளித் தீபங்கள்
அறநெறி வியூகத்தில்
எண்ணற்ற மனிதமாய்
எண்திசையும் ஒளிர்கின்றோம்
வண்ணத்துப் பூச்சிகளாய்
வாழ்விலே மிளிர்கின்றோம்
கார்த்திகை வீரருக்கு காணிக்கை போதிடுமா
காலத்தில் செய்த உதவி
ஞாலத்தில் பெரிதன்றே
நாளுமே தலைசாய்ப்போம்
நன்றிக்கு வித்தாவோம்
பாரிலே தமிழினமாய்
பண்பாட்டு விழுதெறிவோம்
போரிலே பட்டதுயர் புறத்திலும்
அகத்திலும்
நேரிலே உயிரீர்ந்த உத்தமரின்
உளஉரமே
போற்றுதலும் சாத்துதலும்
தலைசாய்க்கும் தனிவீரம்.
மனிதத்தின் மாவீரம்!.
நன்றி
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading