புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஆறுமோ ஆவல்…
வீரத்தின் வாழ்வும்
வெற்றிச் செறிவும்
பற்றிப் படர்ந்திட்ட
தமிழின மிடுக்கில்
தளர்ச்சியின் படிவு
தாங்கிட முடியா
வலியின் சுவடுகள்
மீளவும் எழுத்திலும்
படிகளின் பதிவில்
ஆறுமோ ஆவல்

இருநிலைக் கூறாய்
இடைவெளி வாழ்வாய்
தளர்ச்சியில் நம்மினம்
தன்னம்பிக்கை உறுதியில்
ஆறுமோ ஆவல்

வானொலி ஏடு
வளமெனத் தொடங்கி
பாமுக ஆறாய்
பாரினில் பாய்ந்து
பரவசத் தமிழில்
பல்கிப் பெருகிடும்
இளையோர் திறனில்
ஆறுமோ ஆவல்..

வற்றாச் சுரங்கமாய்
வண்டமிழ் அமுதம் செம்மொழிச் செந்தமிழ்
செழுமையில் ஆறுமோ ஆவல்!
நன்றி மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading