தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஆறுமோ ஆவல்…
வீரத்தின் வாழ்வும்
வெற்றிச் செறிவும்
பற்றிப் படர்ந்திட்ட
தமிழின மிடுக்கில்
தளர்ச்சியின் படிவு
தாங்கிட முடியா
வலியின் சுவடுகள்
மீளவும் எழுத்திலும்
படிகளின் பதிவில்
ஆறுமோ ஆவல்

இருநிலைக் கூறாய்
இடைவெளி வாழ்வாய்
தளர்ச்சியில் நம்மினம்
தன்னம்பிக்கை உறுதியில்
ஆறுமோ ஆவல்

வானொலி ஏடு
வளமெனத் தொடங்கி
பாமுக ஆறாய்
பாரினில் பாய்ந்து
பரவசத் தமிழில்
பல்கிப் பெருகிடும்
இளையோர் திறனில்
ஆறுமோ ஆவல்..

வற்றாச் சுரங்கமாய்
வண்டமிழ் அமுதம் செம்மொழிச் செந்தமிழ்
செழுமையில் ஆறுமோ ஆவல்!
நன்றி மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading