“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

வாழுங்காலம்

நகுலா சிவநாதன்

இந்தக்கவிதை எடுக்கவும்

வாழுங்காலம்

பட்டு வண்ணச் சேலைகட்டி
பாதை யொன்று வரவழைத்து
கெட்டி மேளம் கொட்டிடவே
கீதை உந்தன் கரம்பிடித்தேன்
சொட்டுத் தேனும் மெல்லவிழும்
சொர்க்கம் காணும் வாழ்வுமிது
கட்டிப் பழமாய் உன்னழகில்
கண்ணன் நானும் மயங்கிநின்றேன்

நட்டு வைத்த வாழைமரம்
நாளை வாழ்வு உனைப்போலே
தொட்டு நானும் கட்டித்தாலி
தோகை உந்தன் கழுத்தினிலே
எட்டு மட்டும் எம்வாழ்வு
எல்லை வகுத்து ஓடிடட்டும்
கட்டும் கூந்தல் அழகினிலே
கன்னி நீயும் வாழ்ந்திடுவாய்

வாழும் வாழ்வு வனப்பினிலே;
வண்ண வடிவம் கொடுத்துவிடும்
கூழும் சேர்ந்து குடித்தாலும்
குடும்ப வாழ்வு மகிழ்வுபெறும்
தாழ்வே யெமக்கு வந்தாலும்
தக்க பாடம் படித்துநாமும்
மாளும் காலம் வசந்தமாக
மகிழ்ந்து நாமும் வாழ்ந்திடுவோம்

நகுலா சிவநாதன் 1771

Nada Mohan
Author: Nada Mohan