தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வாழ்வில் கலையும்… தொடராநிலையும்

நகுலா சிவநாதன்

வாழ்வில் கலையும்… தொடராநிலையும்

பண்பாட்டு கலையும் பழந்தமிழர் வாழ்வும்
நம்நாட்டு சொத்து நாமிதை மதிப்போம்
கண்போல் கலையும் காதலாய் வாழ்வும்
எண்போல் எழுத்தாய் எம்மின வளர்ச்சி

முத்தமிழ் கலைகளில் முன்நிற்கும் அழகு
வித்தக உணர்வின் வியன்மிகு கவர்ச்சி
வர்த்தகத் துறையாலே கலையின் பண்பு
வானுயர்வாய் பறக்குது நாகரிக மோகமாய்

ஓவியம் சிற்பம் நடனம் என்ற நுண்கலைகள்
காவியமாகும் கன்னித் தமிழுக்கு வரமாய் என்றும்
நவீனத்துள் மூம்கி நம்கலை எங்கோ
நலிந்தே உணர்வு மறந்தும் தொடராநிலை

உணர்வும் அசைவும் உள்ளத்து இயைபும்
கணமும் காதலாகும் வாழ்வின் வண்ணம்
நடனத்தின் வெளிப்பாடும் பண்பாட்டு தடமும்
காலத்தின் ஓட்டத்தில் காணுது மாற்றம்

நகுலா சிவநாதன் 1796

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading