இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வாழ்வில் கலையும்… தொடராநிலையும்

நகுலா சிவநாதன்

வாழ்வில் கலையும்… தொடராநிலையும்

பண்பாட்டு கலையும் பழந்தமிழர் வாழ்வும்
நம்நாட்டு சொத்து நாமிதை மதிப்போம்
கண்போல் கலையும் காதலாய் வாழ்வும்
எண்போல் எழுத்தாய் எம்மின வளர்ச்சி

முத்தமிழ் கலைகளில் முன்நிற்கும் அழகு
வித்தக உணர்வின் வியன்மிகு கவர்ச்சி
வர்த்தகத் துறையாலே கலையின் பண்பு
வானுயர்வாய் பறக்குது நாகரிக மோகமாய்

ஓவியம் சிற்பம் நடனம் என்ற நுண்கலைகள்
காவியமாகும் கன்னித் தமிழுக்கு வரமாய் என்றும்
நவீனத்துள் மூம்கி நம்கலை எங்கோ
நலிந்தே உணர்வு மறந்தும் தொடராநிலை

உணர்வும் அசைவும் உள்ளத்து இயைபும்
கணமும் காதலாகும் வாழ்வின் வண்ணம்
நடனத்தின் வெளிப்பாடும் பண்பாட்டு தடமும்
காலத்தின் ஓட்டத்தில் காணுது மாற்றம்

நகுலா சிவநாதன் 1796

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading