தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

விடியாத இரவொன்று

இருளோடு இருளாக
இழந்தைவைகளை சுமந்த படி
விடியாத இரவு ஒன்றில்
படகு ஏறி கரை கடந்தேன்
தாய் மண் தவிப்பு நெருப்போடு

இறுதி சமர் காலமதில்
ஒட்டிக்கொண்ட உறவெல்லாம்
சிதறும் படி குண்டு மழை
கூக்குரல் கேட்காத வெடியோசை
விடியாத இரவு ஒன்றில்
உயிர்பிச்சை பெற்ற மகன்
கரை கடந்தான் படகேறி

ஆண்டு பல கடந்தோடி
அழியாத நினைவெல்லாம்
சுமக்கின்றான் விடியாத இரவோடு
விடி வெள்ளி காண்பதற்கு!!!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading