அகிம்சையின் ஆகுதியே…

வசந்தாஜெகதீசன்
அன்னை தேசத்து அண்ணல் காந்தியே
உண்ணா நோன்பின் உலகப்படிமம்
உயிரீர்ந்து மடிந்த உயிரின் இமயம்
மெழுகுவர்த்தியாய் உருகிய கோலம்
கண்ணில் நீராய் கடலெனப்
பொங்கும்

மண்ணின்மைந்தா அகிம்சை வேந்தா
ஈரறு தினத்தின் ஈகைச்சுடரே
ஈழவேரின் வேட்கைத் தீயே
ஆகுதியானாய் அன்னை மண்ணில்
அகிம்சைப் போரில் உரிமை பூண்டாய்
அண்ணல் தீலிபனே அகிம்சையின் ஆகுதி

வரைந்த கோலத்தின் வைகறை ஒளியே
ஈழமண்ணின் விடியல் வேட்கை
இலக்கில் வென்றிட்ட அகிம்சை வாதி
ஈழத்தின் வேரிலே தீலிபனின் சுவாசம்இரண்டறக் கலந்திட்ட
ஈகையின் யாகம்
இன்னுயிர் ஈர்ந்த தியாகமே வாழி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading