” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அகிம்சையின் ஆகுதியே…

வசந்தாஜெகதீசன்
அன்னை தேசத்து அண்ணல் காந்தியே
உண்ணா நோன்பின் உலகப்படிமம்
உயிரீர்ந்து மடிந்த உயிரின் இமயம்
மெழுகுவர்த்தியாய் உருகிய கோலம்
கண்ணில் நீராய் கடலெனப்
பொங்கும்

மண்ணின்மைந்தா அகிம்சை வேந்தா
ஈரறு தினத்தின் ஈகைச்சுடரே
ஈழவேரின் வேட்கைத் தீயே
ஆகுதியானாய் அன்னை மண்ணில்
அகிம்சைப் போரில் உரிமை பூண்டாய்
அண்ணல் தீலிபனே அகிம்சையின் ஆகுதி

வரைந்த கோலத்தின் வைகறை ஒளியே
ஈழமண்ணின் விடியல் வேட்கை
இலக்கில் வென்றிட்ட அகிம்சை வாதி
ஈழத்தின் வேரிலே தீலிபனின் சுவாசம்இரண்டறக் கலந்திட்ட
ஈகையின் யாகம்
இன்னுயிர் ஈர்ந்த தியாகமே வாழி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan