அஞ்சலெனும் அற்புதம்

ரஜனி அன்ரன் (B.A) “அஞ்சலெனும் அற்புதம்” 09.10.2025

நூற்றாண்டுகள் கடந்த பந்தம்
பற்றோடு வாசல் தேடிவரும் வசந்தம்
தகவல் தொடர்பின் அச்சாரம்
காலத்தின் இணைப்புப் பாலம்
இன்றுவரையும் தொடரும் பயணம்
அன்பினைச் சுமந்துவரும் ஆரம்
அஞ்சலெனும் அற்புதப் பாலம் !

உலகின் மூலைமுடுக்கெல்லாம் பறந்துசெல்லும்
மொழிக்கான விடிவெள்ளிநீ
வெள்ளைக் காகிதத்தின் கவிதைநீ
எமைக் கொள்ளை கொண்ட காவியம்நீ
சொந்தபந்தங்களின் சுகநலங்கள்
தூரதேச உறவுகளின் நடப்புக்களை
துல்லியமாய் தாங்கிவரும் பெட்டகமே
அஞ்சலெனும் அற்புதமே வாழியநீ !

அஞ்சல் தலையும் சரித்திரம் பேசும்
அத்துணைச் சிறப்பு உன்தார்ப்பரியம்
ஊரறியும் உலகறியும் உன்சேவையின் அர்ப்பணம்
அஞ்சலெனும் காவியமே நீவாழி !

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading