” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அஞ்சலெனும் அற்புதம்

ரஜனி அன்ரன் (B.A) “அஞ்சலெனும் அற்புதம்” 09.10.2025

நூற்றாண்டுகள் கடந்த பந்தம்
பற்றோடு வாசல் தேடிவரும் வசந்தம்
தகவல் தொடர்பின் அச்சாரம்
காலத்தின் இணைப்புப் பாலம்
இன்றுவரையும் தொடரும் பயணம்
அன்பினைச் சுமந்துவரும் ஆரம்
அஞ்சலெனும் அற்புதப் பாலம் !

உலகின் மூலைமுடுக்கெல்லாம் பறந்துசெல்லும்
மொழிக்கான விடிவெள்ளிநீ
வெள்ளைக் காகிதத்தின் கவிதைநீ
எமைக் கொள்ளை கொண்ட காவியம்நீ
சொந்தபந்தங்களின் சுகநலங்கள்
தூரதேச உறவுகளின் நடப்புக்களை
துல்லியமாய் தாங்கிவரும் பெட்டகமே
அஞ்சலெனும் அற்புதமே வாழியநீ !

அஞ்சல் தலையும் சரித்திரம் பேசும்
அத்துணைச் சிறப்பு உன்தார்ப்பரியம்
ஊரறியும் உலகறியும் உன்சேவையின் அர்ப்பணம்
அஞ்சலெனும் காவியமே நீவாழி !