அன்னை 73

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025

அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப் புரிய வைப்பா!

பசிகொஞ்சம் வாட்டினாலும்
பிள்ளை வரவிற்காய் காத்திருப்பு
பக்கத்தில் நாம் வரவே
பளிச்சென்ற முகயொலிப்பு!
அன்பின் பொக்கிஷமும்
அரவணைப்பின் தெய்வமும்

அர்பணிப்பின் வள்ளலும்
பொறுமையின் சிகரமும்
பொல்லாமை நீக்குபவளும்
பலபிள்ளை பெற்றாலும் பாரபட்சமின்றி
திகட்டாத அன்போடு
தினந்தோறும் பாசப்பகிர்வோடு…

சொல்லில் வடிக்க முடிக்கா
சொல் தொடரோடு
மூச்சிறக்கி எமை ஈன்ற அன்னையே…
மூச்சுள்ள வரை மூச்சாய் நாமிருக்க
முதியோர் இல்லமெல்லாம்
முற்றாய் குறைந்து வரும்.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading