” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அன்னை 73

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025

அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப் புரிய வைப்பா!

பசிகொஞ்சம் வாட்டினாலும்
பிள்ளை வரவிற்காய் காத்திருப்பு
பக்கத்தில் நாம் வரவே
பளிச்சென்ற முகயொலிப்பு!
அன்பின் பொக்கிஷமும்
அரவணைப்பின் தெய்வமும்

அர்பணிப்பின் வள்ளலும்
பொறுமையின் சிகரமும்
பொல்லாமை நீக்குபவளும்
பலபிள்ளை பெற்றாலும் பாரபட்சமின்றி
திகட்டாத அன்போடு
தினந்தோறும் பாசப்பகிர்வோடு…

சொல்லில் வடிக்க முடிக்கா
சொல் தொடரோடு
மூச்சிறக்கி எமை ஈன்ற அன்னையே…
மூச்சுள்ள வரை மூச்சாய் நாமிருக்க
முதியோர் இல்லமெல்லாம்
முற்றாய் குறைந்து வரும்.

Nada Mohan
Author: Nada Mohan