நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

அன்புதான் ஆளுகின்ற சக்தி

சக்தி சிறினிசங்கர்
இன்முகம் இல்லாதோர் பேச்சும்
இருளது சூழ்ந்திடவே செய்யும்
அன்பினால் எல்லோரும் தங்கள்
அறிவிலே தமக்குரிய ஆவார்
வன்முறை விரட்டிவிடு வாகை
வந்துதான் சேருமேகாண் வாழ்வில்
அன்புடைய நெஞ்சம்கொள் மக்கள்
அனைவரும் அடிபணிவர் தாமே
துடிப்புடன் இருக்கணுமே துட்டர்
நடிப்புடன் செயல்படாது நாவில்
நாணயம் கொண்டுதானே என்றும்
படிந்திட வைத்திடலாம் உள்ளம்
பகைகளைக் களைவதுதான் பண்பு
செடிகளும் உயிர்க்கிறதே அன்பில்
சேர்ந்துதான் வாழ்ந்திடுதல் இன்பம்!
சேர்ந்துதான்

Author: