அலை

ராணி சம்பந்தர்

இடி மின்னலோடு கடைந்திடும்
மழை நீரோ மோராகிக் கடலில்
குடைந்து குடித்த அலையினது
குடலோ முட்டிக் குவளையாகக்
குமிழ் விட்டுக் குதூகலித்தவன்

கண்ணுக்கெட்டிய தூரங் காணும்
மண் தொட்டு முத்தமிட்டே முட்டிய
குமிழ் நுரையைக் கரை சேர்த்துத்
திரும்பிப் பாராது செல்லும் பார்
போற்றும் காவியக் கதாநாயகன்

எட்டி எட்டி வானந் தொட்டுத் தலை-
குத்துக்கரணமிட்டு வாலை வாலை
ஆட்டிடும் கதாநாயகி அழகு மீனோடு
விளையாட வானளவு உயரப் பாயும்
பேரலையோ மிதந்து வரும் கப்பலைக்
கட்டிப்பிடித்துக் காலால் உதைத்துக்
கவிழ்த்தவனும் இந்த அலையே .

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading