” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அலை

ராணி சம்பந்தர்

இடி மின்னலோடு கடைந்திடும்
மழை நீரோ மோராகிக் கடலில்
குடைந்து குடித்த அலையினது
குடலோ முட்டிக் குவளையாகக்
குமிழ் விட்டுக் குதூகலித்தவன்

கண்ணுக்கெட்டிய தூரங் காணும்
மண் தொட்டு முத்தமிட்டே முட்டிய
குமிழ் நுரையைக் கரை சேர்த்துத்
திரும்பிப் பாராது செல்லும் பார்
போற்றும் காவியக் கதாநாயகன்

எட்டி எட்டி வானந் தொட்டுத் தலை-
குத்துக்கரணமிட்டு வாலை வாலை
ஆட்டிடும் கதாநாயகி அழகு மீனோடு
விளையாட வானளவு உயரப் பாயும்
பேரலையோ மிதந்து வரும் கப்பலைக்
கட்டிப்பிடித்துக் காலால் உதைத்துக்
கவிழ்த்தவனும் இந்த அலையே .

Nada Mohan
Author: Nada Mohan