இசை பாடும் குயில்கள்

ராணி சம்பந்தர்

இசை பாடும் குயில்கள்
வசை பாடி வாடிய படியே
பெருவாரியாய் வேறிடம்
தேடியே பறந்து ஓடுதே

கால மாற்றம் ஆரம்பமே
கோலம் மாறிய குளிரில்
குஞ்சுகள் நெஞ்சு வருந்த
தஞ்சக் கேடால் பாடுதே

விறைக்குது விறைக்குது
கால் விரல்கள் நடுங்குது
போர்க்கப் போர்வையோ
உண்ண உணவுகளோ
எதுவுமே கேட்டாலும்
கிடையாது கிடையாதே

பார்க்கப் பாவமான எம்
போன்ற ஜீவன் இனி
இவ் உலகில் பிறக்கவே
கூடாது கூடாது அம்மா
பிறக்கவே கூடாது என.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading