நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

இசை பாடும் குயில்கள்

ராணி சம்பந்தர்

இசை பாடும் குயில்கள்
வசை பாடி வாடிய படியே
பெருவாரியாய் வேறிடம்
தேடியே பறந்து ஓடுதே

கால மாற்றம் ஆரம்பமே
கோலம் மாறிய குளிரில்
குஞ்சுகள் நெஞ்சு வருந்த
தஞ்சக் கேடால் பாடுதே

விறைக்குது விறைக்குது
கால் விரல்கள் நடுங்குது
போர்க்கப் போர்வையோ
உண்ண உணவுகளோ
எதுவுமே கேட்டாலும்
கிடையாது கிடையாதே

பார்க்கப் பாவமான எம்
போன்ற ஜீவன் இனி
இவ் உலகில் பிறக்கவே
கூடாது கூடாது அம்மா
பிறக்கவே கூடாது என.

Nada Mohan
Author: Nada Mohan