ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

இசை (54)

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-03-2025

பிறப்பிலும் இறப்பிலும்
பின்தொடரும் முணுமுணுப்பாய்
கண்மூடித் தூங்கவைக்க
கையாளும் இசையிதுவாய்.

இருதய துடிப்பும்
இசைக்குமே கருவியாய்
மனிதனின் ஓட்டமும்
மலைக்குமே அதிர்வலையாய்

தாய்வயிற்றின் கருவாய்
தந்தபாடல் நலுங்கு
மண்ணில் உதிர்த்ததும்
மலர்ந்தது தாலாட்டு

இளம் வயதினிலே
காதலும் வீரமும்
உயிர் திறந்தபின்
ஒப்பாரி பிறக்கிதிங்கே

உயிராகவே இசை
உயர்ந்தது உலகினிலே
எதிர்கால சந்ததியும்
எண்ணியிதை இசைத்திடு!

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading