இசை (54)

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-03-2025

பிறப்பிலும் இறப்பிலும்
பின்தொடரும் முணுமுணுப்பாய்
கண்மூடித் தூங்கவைக்க
கையாளும் இசையிதுவாய்.

இருதய துடிப்பும்
இசைக்குமே கருவியாய்
மனிதனின் ஓட்டமும்
மலைக்குமே அதிர்வலையாய்

தாய்வயிற்றின் கருவாய்
தந்தபாடல் நலுங்கு
மண்ணில் உதிர்த்ததும்
மலர்ந்தது தாலாட்டு

இளம் வயதினிலே
காதலும் வீரமும்
உயிர் திறந்தபின்
ஒப்பாரி பிறக்கிதிங்கே

உயிராகவே இசை
உயர்ந்தது உலகினிலே
எதிர்கால சந்ததியும்
எண்ணியிதை இசைத்திடு!

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading