புதைகுழிகளின் மர்மங்கள்……

ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026 காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும் காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க புதைகுழிகளின் மர்மங்களும்...

Continue reading

இசை (54)

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-03-2025

பிறப்பிலும் இறப்பிலும்
பின்தொடரும் முணுமுணுப்பாய்
கண்மூடித் தூங்கவைக்க
கையாளும் இசையிதுவாய்.

இருதய துடிப்பும்
இசைக்குமே கருவியாய்
மனிதனின் ஓட்டமும்
மலைக்குமே அதிர்வலையாய்

தாய்வயிற்றின் கருவாய்
தந்தபாடல் நலுங்கு
மண்ணில் உதிர்த்ததும்
மலர்ந்தது தாலாட்டு

இளம் வயதினிலே
காதலும் வீரமும்
உயிர் திறந்தபின்
ஒப்பாரி பிறக்கிதிங்கே

உயிராகவே இசை
உயர்ந்தது உலகினிலே
எதிர்கால சந்ததியும்
எண்ணியிதை இசைத்திடு!

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading