இது வாழ்க்கையப்பா

ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான வாழ்க்கையை கட்டிவிடும் நினைவுகள்
கடினமானதும் பழகிவிட இலகுவாகுவதுமான நிகழ்வுகள்

வாழ்க்கை ஒரு புதிரான புதிர்
அதை அவிழ்ப்பதோ மனிதனின் மதி
வாழ்க்கை ஒரு மெய்யான கனவுதான்
அதை நிகழச்செய்வது மானுடரின் கடமைதான்

நேசம் பாசம் காதலெனும் உலகம்
சொந்தம் பந்தமென உருகிக்கொண்டே பழகும்
தொடர்கதையாகி நீளும் பக்கங்கலொவ்வொன்றிலும் ஆனந்தமே
புதிய உயிர்களின் வருகையும் சந்தோசமே

துக்கம் மகிழ்ச்சி இரண்டுமே இருக்கும்
அழுதுவிட்டு சிரிக்கையிலே நிம்மதியும் பிறக்கும்
இறைவா உனது பரிசு அற்புதம்
நிறைவான நன்றியை சமர்ப்பிக்கின்றேன் உன்பதம்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading