திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

இது வாழ்க்கையப்பா

ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான வாழ்க்கையை கட்டிவிடும் நினைவுகள்
கடினமானதும் பழகிவிட இலகுவாகுவதுமான நிகழ்வுகள்

வாழ்க்கை ஒரு புதிரான புதிர்
அதை அவிழ்ப்பதோ மனிதனின் மதி
வாழ்க்கை ஒரு மெய்யான கனவுதான்
அதை நிகழச்செய்வது மானுடரின் கடமைதான்

நேசம் பாசம் காதலெனும் உலகம்
சொந்தம் பந்தமென உருகிக்கொண்டே பழகும்
தொடர்கதையாகி நீளும் பக்கங்கலொவ்வொன்றிலும் ஆனந்தமே
புதிய உயிர்களின் வருகையும் சந்தோசமே

துக்கம் மகிழ்ச்சி இரண்டுமே இருக்கும்
அழுதுவிட்டு சிரிக்கையிலே நிம்மதியும் பிறக்கும்
இறைவா உனது பரிசு அற்புதம்
நிறைவான நன்றியை சமர்ப்பிக்கின்றேன் உன்பதம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading