நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

இது வாழ்க்கையப்பா

ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான வாழ்க்கையை கட்டிவிடும் நினைவுகள்
கடினமானதும் பழகிவிட இலகுவாகுவதுமான நிகழ்வுகள்

வாழ்க்கை ஒரு புதிரான புதிர்
அதை அவிழ்ப்பதோ மனிதனின் மதி
வாழ்க்கை ஒரு மெய்யான கனவுதான்
அதை நிகழச்செய்வது மானுடரின் கடமைதான்

நேசம் பாசம் காதலெனும் உலகம்
சொந்தம் பந்தமென உருகிக்கொண்டே பழகும்
தொடர்கதையாகி நீளும் பக்கங்கலொவ்வொன்றிலும் ஆனந்தமே
புதிய உயிர்களின் வருகையும் சந்தோசமே

துக்கம் மகிழ்ச்சி இரண்டுமே இருக்கும்
அழுதுவிட்டு சிரிக்கையிலே நிம்மதியும் பிறக்கும்
இறைவா உனது பரிசு அற்புதம்
நிறைவான நன்றியை சமர்ப்பிக்கின்றேன் உன்பதம்

Nada Mohan
Author: Nada Mohan