இரா. விஜயகௌரி

விடைதரவா செல்வமே……..

கொதித்துப் பிளந்து
கோபக்கடலில். வெடித்துச் சிதறி
வேகச் சரிவினில். நொருங்கி
சரிந்த சுவர்களின். நடுவே அவள்

பிழந்த பூமியின் இடுக்குகளிடையே
மென்தளிர் மகளாள் கசங்கிக் கிடக்கிறாள்
துருக்கியின் செல்வம் துவண்டது
துடிப்பை. அடக்கி நின்றனள்

அவள் கரங்களின் பிடியை விடாது
விட்டுப் பிரிந்திட முடியா. தந்தை
அனலின் நடுவில் அமர்ந்த சோகம்
அணைத்திட முடியா பாசத் தவிப்பு

இன்னமும் நான் மட்டுமேன்
உயிர்க்கூடு சுமக்கிறேன்
கேள்விகள் துளைக்க 2023
மாசித்திங்கள் 6இன் பதிவெழுதும்
சுவடாய் இவர்கள்

கனக்கிறது இதயம்
கசிகிறது. விழிகள்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading